அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திருட்டு
Read Time:56 Second
கொழும்பு கோட்டை அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்று இனந்தெரியாதவர்களினால் களவாடப்பட்டமை தொடர்பில், கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கோட்டையிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றே, இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.