சட்ட விரோத மதுக்குகை பொலிஸாரினால் முற்றுகை
Read Time:52 Second
ஹிரான பகுதியில் சட்டவிரோத மதுக்குகையொன்றை நடத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவரைப் பாணந்துறைப் பொலிஸார் கடந்த திங்கட்கிழமை கைது செய்;துள்ளனர். சாராயம் போன்று தோற்றமளிக்கும் வகையில் நிறம் கலந்த 360 மூன்ஷைன் போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றினர். சந்தேக நபர்கள் சட்டவிரோத மதுவினை எக்கலையிலிருந்து கொண்டுவந்து பாணந்துறை மற்றும் பண்டாரகம பகுதிகளிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலமாக விநியோகித்து வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.