பாலில் விஷம் கலந்து கொல்லப்பட்ட 2 சிறுமிகளின் உடல் தோண்டி எடுப்பு!!

Read Time:2 Minute, 51 Second

f91c4043-e4f1-407c-8637-1bcc1bc867e2_S_secvpfதிருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலு (55) இவரது மகன்கள் உதயகுமார் (25), லட்சுமணன் (10), மகள்கள் லட்சுமி (11), உதயகுமாரி (7). உதயகுமாருக்கும் குரிசிலாப்பட்டு அடுத்த மேட்டு சக்கரகுப்பத்தை சேர்ந்த ஷில்பாவிற்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவர் உதயகுமார் வெளியூரில் வேலை செய்து வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னாள் காதலன் சரவணன் என்பவரை வீட்டிற்கே வரவழைத்து ஷில்பா உல்லாசமாக இருந்து வந்தார். அவரது மாமனார் பாலு மற்றும் மைத்துனனுக்கு இது தெரிய வந்ததும் கண்டித்தனர்.

இந்நிலையில் சிறுமிகள் லட்சுமி, உதயகுமாரி ஆகிய 2 பேரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலை கண்டித்த மாமனார் பாலுவுக்கும், மைத்துனன் லட்சுமணனுக்கும் ஷில்பா பாலில் விஷம் கலந்து கொடுத்தார்.

இதில் லட்சுமணன் இறந்து விட்டார். மாமனார் பாலு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக குரிலாபட்டு போலீசார் ஷில்பாவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மைத்துணன் லட்சுமணனை கொன்றதாகவும், மேலும் கணவரின் இரண்டு தங்கைகள் லட்சுமி, உதயகுமாரியையும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விஷம் கொடுத்து கொன்றதாகவும் வாக்குமூலம் கொடுத்தார்.

ஷில்பா கொடுத்த வாக்குமூலத்தில் அடிப்படையில் குரிசலாப்பட்டு சுடுகாட்டில் புதைக்கப்பட்பட லட்சுமி, உதயகுமாரியின் உடல்கள் இன்று தோண்டி எடுக்கப்பட்டது. அரசு டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு சுப்பிரமணி, தாசில்தார் ராஜசேகரன் முன்னிலையில் சுடுகாட்டிலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை ஓரிரு நாளில் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1330 திருக்குறளையும் தலைகீழாக எழுதும் பள்ளி மாணவி!!
Next post கோவையில் திருமண தகவல் மையம் பெயரில் அழகிகளை சப்ளை செய்த கும்பல் கைது!!