சிம்பு – திரிஷாவை போட்டோஷூட்!!
செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் அடுத்தடுத்து படங்களை இயக்குவதை சிறிது காலம் ஒத்திவைத்திருந்தார். தான் இயக்குவதாக இருந்த ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தை தனது மனைவி கீதாஞ்சலியிடம் இயக்க கொடுத்துவிட்டார். அதேசமயம் அந்தப் படத்தில் திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதும் பொறுப்பை மட்டும் கவனித்து வந்தார்.
பின்னர் பழைய உற்சாகத்துடன் சிம்புவை வைத்து படம் இயக்க இருப்பதாக செல்வராகவன் அறிவித்தார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார். மேலும் டாப்ஸியும் ஜெகபதி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.
இதற்காக சிம்புவையும் திரிஷாவையும் வைத்து போட்டோஷூட் எடுத்துள்ளார் செல்வராகவன். இந்த போட்டோ ஷூட் சிறப்பாக அமைந்துள்ளது என்றும், செல்வராகவன், திரிஷா, டாப்சி ஆகியோருடன் பணியாற்றுவது சிறப்பாக உள்ளது என்றும் சிம்பு கூறியுள்ளார்.
சிம்புவும் திரிஷாவும் ஏற்கெனவே, ‘அலை’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதேபோல், செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய ‘ஆதவரி மடலக்கு அர்தலு வெருலே’ என்ற படத்தில் திரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating