பஞ்சாபில் தொடரும் பலாத்காரம்: 11 பேர் கொண்ட கும்பலால் இளம் பெண் கடத்தி கற்பழிப்பு!!
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஓடும் பஸ்சில் பாலியல் துன்புறுத்தலுக்குப்பிறகு தள்ளி விடப்பட்ட 14 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் நடந்த பஸ், பஞ்சாப் முதல் – மந்திரி பாதல் குடும்பத்தினருக்கு சொந்தமானது என்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்த பரபரப்பு ஓய்வதற்குள் பஞ்சாப்பில் அதே மோகா மாவட்டத்தில் இளம் பெண்ணை 11 பேர் கும்பல் கற்பழித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:–
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டம் வாலா எனும் கிராமத்தை சேர்ந்தவர் ஜீதாசிங். 20 வயதான இவர் தன் காதலர் சம்கர் சிங்குடன் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் தோழியைப் பார்க்க சென்றார்.
வயல் வழியாக சென்று கொண்டிருந்த போது ஜீதா சிங்கின் தோழியின் கணவர் ஜஸ்வந்த் சிங் அவர்களை வழி மறித்தார். சம்கர் சிங்கை அடித்து விரட்டி விட்டு அவர் ஜீதாவை மிரட்டி கடத்திச் சென்றார்.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்குள் ஜீதாவை அழைத்து சென்ற அவர், அங்கு அவரை மிரட்டி கற்பழித்தார். பிறகு அவர் இது பற்றி செல்போன் மூலம் தன் நண்பர்களுக்கு தகவல் கூறினார். உடனே 10 பேர் அங்கு வந்தனர்.
அவர்களும் ஜீதாவை மாறி, மாறி கற்பழித்தனர். பிறகு 11 பேரும் ஜீதாவை மிரட்டி எச்சரித்து விட்டுச் சென்றனர். வீடு திரும்பிய ஜீதா இது பற்றி தன் பெற்றோரிடம் கூறினார்.
பிறகு ஜீதாசிங் பகபுரானா போலீஸ் நிலையத்தில் இது பற்றி புகார் தெரிவித்தார். தன் தோழியின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் தனது கற்பை சூறையாடி விட்டதாக புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பேரில் போலீசார் ஜீதாவை கற்பழித்த ஜஸ்வந்த் சிங் உள்பட 11 பேர் மீது சட்டப்படி 307ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஆனால் இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யவில்லை.
Average Rating