பேஸ்புக்கை பயன்படுத்தி ஆபாச செய்கைகள் செய்தவர்களை போலீசில் மாட்டவைத்த தெலுங்கு நடிகை!!
சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகை அஸ்மிதா கர்னானி ஐதராபத்தில் தன்னுடைய காரில் சென்றுகொண்டிருந்த போது, பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரை நோக்கி ஆபாச செய்கைகள் செய்துள்ளனர். மேலும் அவருக்கு தொல்லை தந்ததுடன் அவரது காரை வழிமறிக்கவும் முயன்றுள்ளனர்.
ஆனால் அஸ்மிதா சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த இருவரையும், அவர்கள் வந்த வண்டியின் பதிவு எண்களையும் தனது போன் மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அந்த புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். அதை அனைவரையும் பகிர்ந்து, அந்த இருவரையும் பேஸ்புக்கில் பிரபலப்படுத்துங்கள் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த புகை படங்களை பகிர்ந்தார்கள்.
மேலும் போக்குவரத்து காவல்துறையின் பேஸ்புக் பக்கத்திற்கும் இணைப்பு கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர், புகைப்படத்தில் இருந்த பைக்கின் பதிவு எண்ணை வைத்து இருவரையும் கைது செய்துள்ளனர்.
Average Rating