விழுப்புரத்தில் கல்லூரி பேராசிரியை மாணவருடன் காதல் திருமணம்: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்!!

Read Time:3 Minute, 41 Second

f771e93b-0907-4f76-8f46-e198e5aefc45_S_secvpfவிழுப்புரம் சாலமேடு முத்தியால் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் ரம்யா (வயது 23). இவர் எம்.பி.ஏ., பி.எச்.டி. படித்துள்ளார்.

இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். அதே கல்லூரியில் விழுப்புரம் கே.கே. ரோடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (21) பி.பி.ஏ. படித்து வந்தார். படிக்கும்போது பேராசிரியைக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறியது.

கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். தற்போது மாணவர் சதீஷ்குமார் 3–ம் ஆண்டு படித்து முடித்தார்.

கடந்த 29–ந் தேதி காலை ரம்யா வீட்டு முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தார். பின்னர் அவரை திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை கோவிந்தராஜ் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரம்யாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வீட்டை விட்டு சென்ற ரம்யாவும், சதீஷ்குமாரும் விழுப்புரம் அருகே உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தஞ்சமடைந்தனர்.

பேராசிரியை ரம்யா போலீசாரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் நானும், சதீஷ்குமாரும் ஒருவரையொருவர் விரும்பினோம். இருவரும் திருமணம் செய்துகொள்ள நினைத்தோம். எங்கள் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ரம்யா காணவில்லை என்று விழுப்புரம் தாலுகா போலீசில் ஏற்கனவே வழக்கு இருந்ததால் அவரையும், சதீஷ்குமாரையும் போலீசார் அங்கு அனுப்பி வைத்தனர். அவர்களை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர் செய்தனர்.

மாஜிஸ்ட்ரேட்டிடம் ரம்யா கூறும்போது, நாங்கள் திருமண வயதை அடைந்துவிட்டோம். நான் விருப்பப்பட்டு தான் சதீஷ்குமாரை திருமணம் செய்து கொண்டேன். எங்களை சேர்த்து வையுங்கள் என்று கூறினார்.

பின்னர் மாணவரும், பேராசிரியையும் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் இதேபோல் மாணவரை ஆசிரியை காதலித்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் பேராசிரியை மாணவரை காதலித்து திருமணம் செய்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதுகாப்பு கேட்டு காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் ஐ.ஜி.யிடம் புகார்!!
Next post தஞ்சை அருகே காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு கத்திக்குத்து: இளம்பெண் கைது!!