விருதுநகர் மாவட்டத்தில் 4 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கிளாமரத்துப்பட்டியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 25) என்பவருக்கும் வருகிற 6–ந்தேதி திருமணம் நடக்க இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சமூகநலத்துறை அதிகாரிகள் அந்த ஊருக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கிருஷ்ணகுமார் (23) என்பவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. இதை அதிகாரி தடுத்து நிறுத்தினார்கள்.
இதேபோல் 14 வயது சிறுமிக்கும் கார்மேகம் என்பவருக்கும் திருமணம் நடக்க இருந்தது இதையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.
இதே போல் மேலகண்டமங்களத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் மாங்குளத்தை சேர்ந்த சோலை ராஜா (25) என்பவருக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நடக்க இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகளால் மீட்கப்பட்ட 4 சிறுமிகளும் விருதுநகர் பாண்டியன்நகர் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Average Rating