கன்னட பிரசாத் காதலி நடிகை குசும் விபசார வழக்கில் கைது

Read Time:3 Minute, 23 Second

19002.jpgசென்னையில் விபசாரத்தில் ஈடுபட்ட பிரபல புரோக்கர் கன்னட பிரசாத் கடந்த பிப்ரவரி மாதம் பிடிபட்டான்.சென்னை நட்சத்திர ஓட்டலில் அவன் சுற்றி வளைத்து கைது செய்யப்பட் டான். அவனுடன் அவனது காதலி நடிகை குசும், உதவி யாளர்கள் பாரதி கண்ணன், சரவணக்குமார், சரவணன் உள்பட மொத்தம் 6 பேர் கைதானார்கள். இது தொடர்பான வழக்கில் நடிகை குசும், கன்னட பிரசாத் துடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டதாக ஏற்கனவே கைதாகி இருந்தார். பின்னர் புழல் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். இதில் கன்னட பிரசாத் மீது மட்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது. நடிகை குசும் ஜாமீனில் வெளியில் வந் தார். கன்னட பிரசாத்துடன் சேர்ந்து பிடிபடுவதற்கு சில தினங்களுக்கு முன்பு ஆலந்தூரில் காரில் விபசார புரோக்கர்கள் சிலருடன் குசும் சிக்கினார். அப்போது விபசார தடுப்பு போலீசார் நடிகை குசுமை பாதிக்கப்பட்ட பெண்ணாக கருதி மயிலாப்பூர் மகளிர் காப்பகத்தில் வைத்து இருந்தனர். தற்போது கன்னட பிரசாத் கைதானதும், அவன் வாக்கு மூலத்தில் குசும் தன் விபசார தொழிலுக்கு உதவியாக இருந் தான் என்று கூறி இருந்தார். இதன் அடிப்படையில் விபசா ரத்தில் ஈடுபட்டதாக நடிகை குசும் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த சில மாதங்களாக போலீசார் நடிகை குசுமை தேடி வந்தனர். இந்த நிலையில் குசும் புழல் சிறையில் இருக்கும் கன்னட பிரசாத்தை சந்தித்து பேசுவ தாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து விபசார தடுப்புப்பிரிவு உதவிக்கமிஷ னர் சங்கரபாண்டியன், இன்ஸ் பெக்டர் முருகன் ஆகியோர் மேற்பார்வையில் ஒரு தனிப் படை அமைக்கப்பட்டது. அவர்கள் குசுமை கண்காணித் தனர்.

நேற்று காலை திடீரென தனிப்படை போலீசார் குசுமை கைது செய்தனர். குசுமிடம் சிந்தாதரிப்பேட்டையில் உள்ள விபசார தடுப்பு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.

புழல் சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு மும்பை சென்றதாக குசும் போலீசாரிடம் கூறினார். என்றாலும் அவர் சென்னையில் தங்கி இருந்து விபசாரத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாகவும் குசுமிடம் விசாரணை நடத்து வருகிறது.

நேற்று மாலை நடிகை குசும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிலிப்பைன்ஸ் நாட்டில்: வணிக வளாகத்தில் குண்டு வெடித்து 8 பேர் பலி; 70 பேர் காயம்
Next post துப்பாக்கி முனையில் அ.தி.மு.க. செயலாளரை கடத்தி ரூ.3 லட்சம் பறிப்பு