சேலம் அருகே வாலிபர் எரித்துக் கொலை!!

Read Time:3 Minute, 46 Second

bfdbf170-b82e-458e-a13d-7e505da583c6_S_secvpfசேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உழவர் சந்தை உள்ளது. இங்கு காலை நேரத்தில் பொதுமக்கள் திரளாக வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள். வெளியூர் விவசாயிகள் பலரும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை விற்று செல்வார்கள்.

இந்த உழவர் சந்தை அருகில் குப்பை தொட்டி உள்ளது. இந்த குப்பை தொட்டியில் இன்று அதிகாலை துர்நாற்றம் அடித்தது. இதை அறிந்த வியாபாரிகள் சிலர் குப்பை தொட்டிக்கு சென்று எட்டி பார்த்தனர். அப்போது குப்பை தொட்டியில் உடல் கருகிய நிலையில் 25 வயது மதிக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது முகம் மற்றும் உடல் அடையாளம் தெரியாமல் இருக்க உடல் முழுவதும் எரிக்கப்பட்டு இருந்தது.

இதை அறிந்த சேலம் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசன் மற்றும் போலீசார் உடனே சம்பவ இடம் விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் எரித்து கொல்லப்பட்ட வாலிபர் யார்? சேலத்தை சேர்ந்தவரா? அல்லது வெளியூரை சேர்ந்தவரா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த வாலிபர் தாக்கப்பட்டு பின்னர் உடல் எரிக்கப்பட்டதா? அல்லது உயிரோடு எரித்து கொல்லப்பட்டாரா? என்றும் விசாரணை நடக்கிறது. வாலிபர் இறந்து கிடந்த இடம் அருகே பீடி கட்டு ஒன்றும், காலி மதுபாட்டில் ஒன்றும் கிடந்தது. இவைகளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

இறந்து கிடந்தவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. மண்எண்ணை ஊற்றி எரிக்கப்பட்டு இருந்தால் மண்எண்ணை வாசம் வரும். ஆனால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளதால் வாசம் வரவில்லை. பெட்ரோல் கொண்டு வந்த டின் அல்லது பாட்டில்கள் ஏதும் அருகில் வீசப்பட்டுள்ளதா? என்றும் போலீசார் தேடி பார்த்தனர். ஆனால் பாட்டில் ஏதும் கிடைக்கவில்லை.

பிணம் கிடந்த பகுதியை சேர்ந்த சில ஆட்டோ டிரைவர்கள், கடைக்காரர்கள் சிலரை போலீசார் அழைத்து சென்று விசாரித்தும் வருகிறார்கள். நேற்று மே தினம் விடுமுறை நாளாகும். இந்த நாளில் யாரும் உழவர் சந்தை அருகே வந்து மது குடித்து கலாட்டா செய்து இருக்கலாம் .பின்னர் இந்த தகராறு முற்றி வாலிபர் கொன்று பிணத்தை குப்பை தொட்டியில் வீசி சென்றார்களா? என்றும் விசாரணை நடக்கிறது.

சேலம் மற்றும் அருகில் உள்ள மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அன்னதானப்பட்டி போலீசார் தகவல் தெரிவித்து யாரும் மாயமாகி உள்ளனரா? என்றும் விசாரித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜிப்மர் மருத்துவ கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் புகுந்த நல்ல பாம்பு!!
Next post காட்பாடி அருகே இளம்பெண்ணை கடத்தி 10 பேர் கும்பல் கற்பழித்த கொடூரம்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை!!