காட்பாடி அருகே இளம்பெண்ணை கடத்தி 10 பேர் கும்பல் கற்பழித்த கொடூரம்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை!!

Read Time:3 Minute, 45 Second

f06590e4-f092-4a7c-a977-85619d409111_S_secvpfஆற்காட்டை சேர்ந்தவர் சுமதி (வயது 18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சுமதி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சுமதிக்கு வேறொரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. திருமணம் செய்யாமல் கள்ளக்காதலனுடன் வசித்து வந்தார்.

இதற்கிடையில் கோவிலுக்கு சென்று வரும் வழியில் வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலனுக்கு தெரியாமல் சுமதி அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தார். இந்த விவகாரம் கள்ளக்காதலனுக்கு தெரியவர அவரும் சுமதியை பிரிந்து சென்றார். புதிய காதலனோடு கைகோர்த்த சுமதி பல இடங்களுக்கு சென்று கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

சுமதியின் நடவடிக்கையை அறிந்த புதிய காதலன் தனது நண்பர்களின் காம இச்சைக்கு சுமதியை இரையாக்க எண்ணினர். அதற்காக சுமதியை நைசாக பேசி காட்பாடி அடுத்த வள்ளிமலைக்கு காதலன் அழைத்து வந்தான்.

ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று தனிமையில் இருக்கலாம் என கூறினான். சுமதியும் அவனது ஆசைக்கு சம்மதித்தார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்ற போது அங்கு மறைந்திருந்த 10 பேர் கும்பல் சுமதியை சுற்றி வளைத்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி கத்தி கூச்சலிட்டார். வாயை பொத்திய கும்பல் மாறி மாறி சுமதியின் கர்ப்பை சூறையாடினர்.

இதையடுத்து சுமதியை அங்கேயே விட்டுவிட்டு கும்பல் தப்பியோடியது. படுகாயமடைந்த சுமதியின் அலறல் சத்தம்கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தபோது சுமதிக்கு நேர்ந்த கொடுமையை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுமதியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரண நடத்தினர். தப்பியோடிய 10 பேர் கும்பலை உடனடியாக பிடிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலம் அருகே வாலிபர் எரித்துக் கொலை!!
Next post திருமணம் செய்யும்படி சப்-இன்ஸ்பெக்டர் துன்புறுத்துகிறார்: ஐ.ஏ.எஸ் மாணவி புகார்!!