ஆபாச படமெடுத்து மிரட்டல்- பெண் புகார்
தன்னை நிர்வாண படம் எடுத்து வைத்து மிரட்டி வருவதாக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை நகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.சென்னையை அடுத்துள்ள மேடவாக்கத்தை சேர்ந்தவர் மாதவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவரைப் பிரிந்து தனியே வாழும் இவருக்கு ஒரு மகன் இருக்கிறான். மாதவிக்கு வேளச்சேரி பகுதியில் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார் மாதவி. ஆனால், மாதவிக்குத் தெரியாமல் அவரை வீடியோ எடுத்துள்ளார் அந்த பீகார் வாலிபர். இருவரும் உல்லாசமாக இருந்ததை ரகசியமாக படம் பிடித்துள்ளார். அந்த வாலிபருடன், மாதவி உல்லாசமாக இருக்கும்போது ஆபாச படத்தை பார்ப்பது வழக்கமாம். இந்நிலையில் ஒருநாள் ஆபாச படம் பார்த்தபோது அந்த வாலிபருடன் தானே உல்லாசமாக இருந்த காட்சி வீடியோவில் ஓடியது கண்டு அதிர்ச்சியடைந்த மாதவி சண்டை போட்டுள்ளார். அப்போதைக்கு மாதவியை சரிகட்டி அனுப்பிவிட்டார் அந்த வாலிபர். பின்னர் தன்னுடைய நண்பர்களுடனும் உல்லாசமாக இருக்கச் சொல்லி மாதவியை மிரட்டியுள்ளார். இதற்கு மறுத்த மாதவியை வீடியோவைக் காட்டி மிரட்டியுள்ளார்.இதனால் பயந்து போன மாதவி சென்னை காவல் துறை ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார். இந் நிலையில் அந்த பீகார் வாலிபர் தலைமறைவாகிவிட்டார்.அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.