மனநோயாளியான இளம்பெண்ணை கற்பழித்த ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு!!
Read Time:1 Minute, 6 Second
மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் மனநோயாளியாக இருந்த இளம்பெண்ணை கற்பழித்த ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள தேவ்லாலி கேம்ப் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான கர்ணல் வினோத் சஹானி என்பவர் கடந்த 30-ம் தேதி மனநோயாளியாக இருந்த 21 வயது பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டதாக பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், குற்றம்சாட்டப்பட்ட ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating