உ.பி.யில் ஜீப்-லாரி நேருக்கு நேர் மோதல்: 6 இளைஞர்கள் பலி!!
Read Time:1 Minute, 6 Second
உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 6 இளைஞர்கள் பலியாகினர்.
துல்சிபூரில் இருந்து நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஜீப், பிஜிலிபூர் கிராமம் அருகே சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதியது. இதனால், கடுமையாக சேதம் அடைந்த ஜீப் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜீப்பில் சென்ற கங்கார்பூர் கிராமத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் பலியாகினர்.
3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating