நகைக்காக தாயை கடத்திய நவீன புத்திரன்!

Read Time:1 Minute, 43 Second

பட்டுக்கோட்டையில் நகைக்காக பெற்றத் தாயையை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை அடுத்துள்ள அணைக்காடு கிராமத்தில் வசிப்பவர் ரங்கசாமித் தேவர்.இவரது மனைவி அஞ்சம்மாள்(60). இவர்களுக்கு முருகேசன் என்ற ஒரு மகன் உள்ளார். பல தொழில்களை செய்த இவருக்கு தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வந்துள்ளார். இதனால் தொடர்ந்து வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுள்ளார். மகன் படும் கஷ்டத்தை பார்த்து பொறுக்காத தாய், தனது உறவினர் மூலம் வேலைக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் தனக்கு வேலைக்கு போக பிடிக்கவில்லை. எனவே நீ அணிந்துள்ள 4 பவுன் நகைகளை கொடு எனக் கேட்டு தனது தாய் அஞ்சம்மாளிடம் முருகேசன் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் அதற்கு அவரது தாய் நகைகளை தர மறுத்து விட்டதால், ஆத்திரம் அடைந்த முருகேசன் அவரது தாய் அஞ்சம்மாளை நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் கடத்தியுள்ளார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக தாயை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கனடாவில் தீ விபத்து புரளி: நடிகர் விஜயகாந்த் ஓட்டலை விட்டு வெளியே ஓடிவந்தார், 3 மணி நேரம் தவிப்பு
Next post புத்தகத்திற்குள் துளை போட்டு செல் பதுக்கிய மாணவி