லண்டன் நகர மேயர் தேர்தலில் இலங்கை பெண் போட்டி
Read Time:57 Second
இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரின் மேயர் தேர்தலில் இலங்கை பெண் ஒருத்தி லிபரல் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவர் பெயர் சாமலி பெர்னாண்டோ. 28 வயதான இவர் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இந்த தேர்தலில் போட்டியிடும் முதல் ஆசியப்பெண் இவர் தான். இவரது தாயார் வனிதா பெர்னாண்டோ லண்டனில் மாஜிஸ்திரேட்டாக இருக்கிறார். இவர் இலங்கை பெற்றோருக்கு இந்தியாவில் பிறந்தவர். சாமலியின் தந்தை சுமல் பெர்னாண்டோ இலங்கையில் கலுதாரா என்ற இடத்தை சேர்ந்தவர். வக்கீலாக இருக்கிறார். இவர் இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்.