இரண்டு பேரை கடித்துக் கொன்ற ஒட்டகத்தை விஷ ஊசி போட்டுக் கொன்ற கிராம மக்கள்!!

Read Time:2 Minute, 9 Second

96f6a0dd-bb78-489b-b8c8-950943d4c050_S_secvpfஅரியானா மாநிலத்தில் உள்ள பட்டேஹாபாத் மாவட்டத்தின் கப்ரா காலன் கிராமத்தில் வசிக்கும் பல்சிங் கோடரா என்பவருக்கு சொந்தமான ஒட்டகம் நேற்றிரவு தனது கால்கட்டை அறுத்துக் கொண்டு அருகாமையில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்தது.

இதைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் மஹிந்தர் சிங் அந்த ஒட்டகத்தை விரட்ட முயன்றார். முரட்டுத்தனமாக அவரை முட்டித்தள்ளிய ஒட்டகம், வெறித்தனமாக கடித்தது. இதைக் கண்ட அவரது சகோதரரான ராம் குமார் ஒட்டகத்தின் பிடியில் இருந்து மஹிந்தர் சிங்கை காப்பாற்ற ஓடினார்.

அவரையும் முட்டி கீழே தள்ளிய ஒட்டகம், மிதித்தும், கடித்தும் காயப்படுத்தியது. இதைக் கண்ட ராம் குமாரின் மைத்துனர் சுர்ஜீத் சிங் ஒட்டகத்தை அடக்க முயன்றபோது அவரை வாயால் கவ்வித் தூக்கி எதிரில் இருந்த சுவற்றின் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லப்பட்ட மஹிந்தர் சிங் வழியிலேயே பலியானார். காயமடைந்த ராம் குமார் ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இருவரின் உயிரை பறித்த ஒட்டகம் இன்னும் எத்தனை பேரை பதம் பார்க்குமோ? என பயந்த கிராம மக்கள் அந்த ஓட்டகத்தை இன்று விஷ ஊசி போட்டுக் கொன்றனர். இச்சம்பவம் தொடர்பாக தானி பிரேம்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பட்டாவின் இரு முனைகளால் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி!!
Next post 5 மாத கர்ப்பிணியை கூட்டாக சேர்ந்து கற்பழித்து, செல்போனில் படம் பிடித்த 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலை!!