இந்தோனேஷியா: கடலில் கப்பல் மூழ்கி 29 பேர் பலி
Read Time:48 Second
இந்தோனேஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் கடலில் சென்ற கப்பல் பாபா என்ற நகரை அடைவதற்கு முன்பு திடீர் என்று மூழ்கியது. இந்த கப்பலில் 200 பயணிகள் இருந்தனர். அவர்களில் 29 பேர் பலியானார்கள். மேலும் பலரை காணவில்லை. அவர்களின் எண்ணிக்கை 100 இருக்கும் என்று கூறப்படுகிறது. கப்பலில் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்பட்டதாலும், அவர்கள் ஒரு பக்கமாக கூடி இருந்ததாலும் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.