26 தொழிலாளர்களுக்கு போதை மருந்து கலந்த பிரசாதம் கொடுத்து 60 கோதுமை மூட்டைகளை திருடிய கொள்ளையர்கள்!!

Read Time:1 Minute, 44 Second

bfacb210-81d2-476c-b6cf-fe43762a2d6f_S_secvpfஅரியானா மாநிலம் குருஷேத்ரா அருகில் போதை மருந்து கலந்த பிரசாரத்தை தொழிலாளர்களுக்குக் கொடுத்து 60 கோதுமை மூட்டைகளை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

குருஷேத்ராவில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள போரி சித்தா கிராமத்தில் கோதுமை கொள்முதல் மையம் உள்ளது. நேற்று இரவு டெம்போவில் வந்து இறங்கிய 2 ஆசாமிகள், அங்கு வேலைசெய்யும் 26 தொழிலாளர்களுக்கும் போதை மருந்து கலந்த பிரசாதம் கொடுத்துள்ளனர்.

அதை சாப்பிட்ட அனைவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து அந்த இரண்டு ஆசாமிகளும், அங்கிருந்த 60 கோதுமை மூட்டைகளை டெம்போவில் ஏற்றிக்கொண்டு தப்பிவிட்டனர்.

காலையில் மயக்கம் தெளிந்து எழுந்த தொழிலாளர்கள் கோதுமை மூட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கோதுமை கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 மாத கர்ப்பிணியை கூட்டாக சேர்ந்து கற்பழித்து, செல்போனில் படம் பிடித்த 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலை!!
Next post “எகிப்து வரவேற்கிறது”… ஆபாசமாக பின்னழகை காட்டிய நடிகை: வெடிக்கும் சர்ச்சை (வீடியோ இணைப்பு)!!