காதலர் டோடி பயத் டயானாவுக்கு கொடுக்க இருந்த நிச்சயதார்த்த மோதிரம்: விசாரணைக்குழு நீதிபதி பார்வையிட்டார்
Read Time:1 Minute, 18 Second
இங்கிலாந்து இளவரசி டயானாவின் மரணம் பற்றி விசாரணைக்குழு விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணைக் குழுவிடம், டயானாவை லண்டன் தொழில் அதிபர் முகமது அல் பயத்தின் மகன் டோடி அல் பயத் காதலித்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர். இது பிடிக்காமல் தான் அவரை அரச குடும்பத்தினர் சதி செய்து கொன்று விட்டனர் என்று முகமது அல் பயத் சாட்சியம் அளித்து இருக்கிறார். விபத்து நடந்த அன்று இரவு டயானாவை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை டயானாவிடம் டோடி தெரிவிக்க இருந்தார். அப்போது அவர் கை விரலில் நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவிக்க இருந்தார். இதற்காக அவர் மோதிரம் வாங்கியது நகைக்கடை காமிராவில் பதிவாகி உள்ளது என்று கூறி அதற்கு ஆதாரமாக காமிராவில் பதிவாகி இருந்த வீடியோ கிளிப்பிங்கை நீதிபதியிடம் போட்டு காட்டினார்கள்.