திருவனந்தபுரம் அருகே வாடகைக்கு குடியிருந்த பெண்ணை கட்டிப்போட்டு கற்பழித்த போலீஸ்காரர்!!

Read Time:2 Minute, 41 Second

b9e2cf09-f793-467c-af05-3c747e38a7df_S_secvpfதிருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு கரைகுளம் பகுதியில் வசிப்பவர் கோல்டன் குமார் (வயது38). இவர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் உத்தரகாண்ட் மாநிலம் ஆகும்.

இவரது மனைவியும் ஆயுதப்படையில் போலீசாக உள்ளார். இவர்கள் தங்கள் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளனர். அந்த வீட்டில் 2 இளம்பெண்கள் மட்டும் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் வாடகைக்கு குடியிருந்த ஒரு பெண் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் ஒரு இளம்பெண் மட்டும் தனிமையில் இருந்தார். மேலும் போலீஸ்காரர் கோல்டன் குமாரின் மனைவியும் பணிக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் இரவு வீடு திரும்பிய போலீஸ்காரர் கோல்டன் குமார் வாடகை வீட்டில் இளம்பெண் மட்டும் தனிமையில் இருப்பதை அறிந்ததும் அவருக்கு விபரீத ஆசை ஏற்பட்டது. அந்த வீட்டிற்குள் கையில் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த அவர் அந்த பெண்ணை மிரட்டி தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறத்தினார். ஆனால் அந்த பெண் அதற்கு மறுத்து கூச்சல் போட்டார். உடனே கோல்டன் குமார் அந்த பெண்ணை தாக்கி கட்டிப்போட்டு கற்பழித்தார். விடிய–விடிய அந்த பெண்ணுக்கு இந்த கொடூரம் நடந்தது. அதன்பிறகு நடந்ததை வெளியில் கூறினால் கொன்று விடுவேன் என்று கோல்டன் குமார் மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த உறவினர் நெடுமங்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போலீஸ்காரர் கோல்டன் குமாரை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி கற்பழிப்பு: பள்ளி சிறுவர்கள் மீது வழக்கு!!
Next post கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் மூலம் விபசாரம்: 3 பேர் கைது!!