கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் மூலம் விபசாரம்: 3 பேர் கைது!!
கொச்சி விமான நிலையம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடந்து வருவதாக போலீஸ் துணை சூப்பிரண்டு பி.பி.சம்சினுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் மெரின் ஜோசப், முரளி, சம்மத் பசீர் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு இளம் பெண்களை வைத்து விபசாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு மணீஷ், ராகுல் கோபால் மற்றும் ஜெனீப் ஆகிய 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
நண்பர்களான இவர்கள் மூவரும் சேர்ந்து நெடும்பாசேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் 10 அறைகளை வாடகைக்கு எடுத்து “மார்வெல் ஹோலிடேய்ஸ்” என்ற பெயரில் நட்சத்திர அந்தஸ்தில் விபசார தொழில் நடத்தியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
போலீசார் சோதனை நடத்த வருவதை அறிந்து அங்கு இருந்த 2 அழகிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிலர் தப்பியோடி விட்டனர். விபசார கும்பலை சேர்ந்த கோட்டயம் காஞ்சிர பள்ளியை சேர்ந்த அனேஷ் என்பவரும் தப்பிவிட்டார். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கைதானவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, அனேஷ் மற்றும் மணீஷ் ஆகியோர் நிறுவனம் நடத்துவதற்காக அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது.
மேலும் ராகுல் கோபால் வரவேற்பாளராகவும் ஜெனீப் வாடிக்கையாளர்களை கவர்ந்து பேசி அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து வரும் இடைத்தரகராக செயல்பட்டதும் தெரியவந்தது.
இவர்கள் விமான நிலையம் வரும் பயணிகள் மற்றும் இணையதளம் வழியாகவும் வாடிக்கையாளர்களை அழைத்து வந்து விபசார தொழில் செய்துள்ளனர்.
Average Rating