வெளிநாடுகளில் வேலை செய்யும் போது நோய்வாய்ப் படுபவர்களுக்கு இலவச சிகிச்சை
Read Time:1 Minute, 20 Second
வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் நிலையில் விபத்துக்குள்ளாகி அல்லது நோய்வாய்ப்பட்டு நாடு திரும்புகின்றவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் செலவில் சிகிச்சையளிப்பது தொடர்பில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் ஆலோசனைக்கமைய வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் சிறீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புப் பெற்று வெளிநாடு சென்று வேலை செய்யும் போது விபத்துக்குள்ளாகி அல்லது நோய்வாய்ப்பட்டு நாடு திரும்புகின்றவர்களுக்கு சிறீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் இலவச சிகிச்சை வழங்ப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.