தோணிக்கல் குட்செட்வீதியில் கிராம சேவையாளர் சுட்டுக்கொலை!!
Read Time:40 Second
வவுனியா தோணிக்கல் குட்செட்வீதியில் கிராம சேவையாளர் ஒருவர் ஆயுதபாணிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இவர் மரைக்காரம்பளை பகுதிக்கான கிராமசேவையாளரான குமாரவேல் குமாரசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர். குட்செட் வீதியில் அமைந்துள்ள இவரது இல்லத்திற்கு சென்ற ஆயுதபாணிகள் இவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.