வளர்ப்பு மகளுக்கு 3 மாதமாக செக்ஸ் டார்ச்சர்: தொழிலாளி கொலையில் கைதான உறவினர் வாக்குமூலம்!!

Read Time:3 Minute, 10 Second

72880c44-e01b-4132-86c5-b351ab1b6522_S_secvpfகாரைக்குடியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த சுமதி (40) என்ற பெண்ணை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சுமதிக்கு முதல் கணவர் மூலம் 2 மகள்கள் உள்ளனர். எனவே செல்வம் தனது மனைவி சுமதி மற்றும் மகள்களுடன் கோவை ஒண்டிப்புதூரில் வாடகை வீட்டில் குடியேறினார்.

நேற்று செல்வம் ஒண்டிப்புதூர் பாலம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். சிங்காநல்லூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் செல்வத்தை அவரது உறவினரான சயானந்தன்(26) கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

செல்வத்தின் மனைவி சுமதி எனக்கு சகோதரி முறை ஆவார். அவரது 2 மகள்களில் ஒருவருக்கு திருமணமாகி விட்டது. 2–வது மகளுக்கு 18 வயது ஆகிறது.

இந்நிலையில் செல்வம் அடிக்கடி சுமதியின் 2–வது மகளிடம் சில்மிஷம் செய்து வந்தார். இதையறிந்த நான் செல்வத்தை கண்டித்தேன். என்றாலும் வளர்ப்பு மகள் தானே என்ற எண்ணத்தில் செல்வம் கடந்த 3 மாதமாக சுமதியின் மகளிடம் அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த அந்த பெண் என்னிடம், வளர்ப்பு தந்தை செல்வத்தின் பாலியல் தொல்லைகளை கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

இதைக்கேட்ட எனக்கு செல்வம் மீது ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவு ஒண்டிப்புதூர் பாலம் அருகே நான் வந்த போது செல்வம் அங்கு வந்தார். அவரிடம் ‘சுமதியின் மகளை ஏன் தொந்தரவு செய்கிறாய்?’ என கேட்டேன். அதற்கு அவர் தகாத வார்த்தைகளால் என்னை திட்டினார்.

இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தவே, கீழே கிடந்த கல்லை எடுத்து அவரை தாக்கினேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். அதன் பின்னரும் ஆத்திரம் தீராமல் அவர் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான சயானந்தனை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட செல்வத்தின் உடல் பிரேதபரிசோதனை இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சல்மானுக்கு ஐந்து வருடங்கள் சிறை!!
Next post கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டு தலைவர் ரூபேசுடன் மகள்கள் சந்திப்பு!!