திருவட்டார் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை!!
திருவட்டார் அருகே உள்ள திருவரம்பு பாடகச்சேரியை சேர்ந்தவர் மரியதாஸ்(வயது27). திருமணம் ஆகாதவர். கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் விழாவுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு மரியதாஸ் வீடு திரும்ப வில்லை. இதனால் அவரது பெற்றோர் அவரை பல இடங்களிலும் தேடினார்கள்.
ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவரது தாய் திருவட்டார் போலீசில் ஒரு புகார் செய்தார். அந்த புகாரில் மரியதாசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்ததாகவும், அந்த பெண்ணை நாங்கள் கண்டித்ததாகவும் இந்த நிலையில் மரியதாஸ் மாயமாகி உள்ளதால் அந்த பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் மரியதாஸ் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு வந்த மரியதாசின் உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த கொலையில் ஒரு பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.
இதுபற்றி திருவட்டார் போலீசார் விசாரித்தபோது அந்த பெண் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் கணவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம் அவர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating