இதுவல்லவா தொழில்நுட்ப புரட்சி?: வாட்ஸ்-அப் மூலம் வேலையை ராஜினாமா செய்த சப்-இன்ஸ்பெக்டர்!!
Read Time:1 Minute, 10 Second
உத்தப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் போலீஸ் துறை கணினிமயமாக்கப்பட்டு 176 போலீஸ் நிலையங்களுக்கும் பொதுவான அவசர உதவி தொலைபேசி புகார் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய வசதியாக ‘வாட்ஸ்-அப்’புடனும் இந்த அவசர உதவி எண் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு இந்த எண்ணுக்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ‘வாட்ஸ்-அப்’ மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கான்பூர் மாவட்டத்தில் உள்ள ரசுலாபாத் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த வினோத் குமார் என்னும் இவர் மேலதிகாரிகளின் ‘குடைச்சல்’ தாங்க முடியாததால் தனது பணியை ராஜினாமா செய்வதாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Average Rating