மனைவியை உதைத்து பெண் குழந்தையை கொல்ல முயற்சி: விவசாயி வெறிச்செயல்!!

Read Time:4 Minute, 53 Second

6cfae437-a818-4adb-8248-b4c88ab4bcdc_S_secvpfசேலம் அருகே உள்ளது தாரமங்கலம். இங்குள்ளது எம்.ஓலைப்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் ஏகாந்தமூர்த்தி (வயது 32). விவசாயி. இவரது மனைவி பேபி(வயது 28). இவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இதில் ஒரு குழந்தைக்கு திவ்யாஸ்ரீ என்றும், மற்றொரு குழந்தைக்கு தினேஷ்குமார் என்றும் பெயர் வைத்தனர்.

பெண் குழந்தை பிறந்ததில் இருந்து ஏகாந்தமூர்த்தி மனைவி பேபியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த பெண் குழந்தையை எப்படி வளர்ப்பது? என கூறி சண்டை செய்து வந்தார். இவரை அக்கம் பக்கம் இருப்பவர்கள் சமாதானம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை இந்த பெண் குழந்தை குறித்து கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த ஏகாந்த மூர்த்தி, பெண் குழந்தையை தூக்கி செல்ல முயன்றார். இதை அறிந்த பேபி, ஓடி சென்று குழந்தையை வாங்கி கொண்டார். இதில் மேலும் கோபம் அடைந்த ஏகாந்தமூர்த்தி, பேபியை அடித்து உதைத்தார். பின்னர் பேபி அணிந்து இருந்த நைட்டியை கிழித்து எறிந்து விட்டு நிர்வாணமாக்கி அடித்து உதைத்தார். இதனால் பேபி வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார்.

பிறகு ஏகாந்தமூர்த்தி பெண் குழந்தை திவ்யா ஸ்ரீயை சாக்குப்பையில் போட்டு எடுத்து கொண்டு மாடுகள் தண்ணீர் குடிக்க வைத்து இருந்த தொட்டிக்குள் அமுக்கி கொல்ல முயன்றார். இதை அறிந்த பேபி சத்தம் போட்டு கத்தினார். இதை கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்து திவ்ய ஸ்ரீயை காப்பாற்றினர். பின்னர் பேபியையும் காப்பாற்றினர். இதற்குள் பேபியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். இவர்கள் ஏகாந்த மூர்த்தி விரட்டி விட்டு பேபியையும், குழந்தைகள் திவ்யாஸ்ரீ, தினேஷ்குமார் ஆகியோரையும் அழைத்து வந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து பேபி கண்ணீர் மல்க கூறியதாவது:–

எனக்கு இரட்டை குழந்தை பிறந்தது பெரிய அதிர்ஷ்டமாக நான் கருதினேன். ஆனால் எனது வீட்டுக்காரர் பெண் குழந்தை நமக்கும் வேண்டாம் என கூறி என்னிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். பெண் குழந்தையை கொன்று விடு என கூறியும் வந்தார். ஆனால் மறுத்து பெண் குழந்தை தான் நம்மை காப்பாற்றும் என கூறி அவரை சமாதானம் செய்து வந்தேன். ஆனால் அவர் சமாதானம் அடையவில்லை. தினமும் என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார்.

நேற்று குழந்தை திவ்யா ஸ்ரீயை கொல்ல முயன்றார். இதை அக்கம் பக்கம் இருந்தவர்கள் தடுத்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேபியின் உறவினர்கள் சிலர் கூறியதாவது:–

ஏகாந்த மூர்த்தி, பேபியை எப்போதும் மிரட்டி அச்சுறுத்தி வந்தார். அடித்து உதைப்பார். இதை அறிந்த நாங்கள் பலமுறை அவருக்கு அறிவுரை கூறி நல்லபடி குடும்பம் நடத்துங்கள் என கூறினோம். ஆனால் அவர் பெண் குழந்தை வேண்டாம் என கூறி வந்தார். இந்த நிலையில் தான் பெண் குழந்தையை கொல்ல முயன்றுள்ளார். இவரை போலீசார் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேபிக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தர வேண்டும்,

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெட் காலா நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட நிர்வாணமாக வந்த கிம், ஜெனிபர், பியான்ஸே (படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-
Next post மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் என்.எல்.சி. தொழிலாளி தற்கொலை!!