பிளஸ்–2 படித்த பெண்ணை நிச்சயம் செய்ததால் தொழிலாளி தற்கொலை!!

Read Time:1 Minute, 44 Second

1bd2a1ef-9ae8-4f21-a237-4b51c8191a08_S_secvpf (1)பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 27). கட்டிட தொழிலாளி. 4–ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

இந்த நிலையில் கணேஷ் குமாருக்கு அவரது பெற்றோர் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினர். அப்போது அவர் ‘நான் 4–ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். எனக்கு படிக்காத பெண்ணையே பாருங்கள்’ என்று கூறினார்.

ஆனால் அவரது பெற்றோர் கணேஷ்குமாருக்கு பிளஸ்–2 படித்த பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தனர். நாம் சொன்னதை கேட்காமல் பெற்றோர் இப்படிச் செய்து விட்டார்களே என மனமுடைந்தார்.

பிளஸ்–2 படித்த பெண்ணுடன் திருமணம் நடந்தால் வாழ்க்கை சரியாக அமையாது என நினைத்த அவர் மனமுடைந்தார். வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விரைந்து சென்று கணேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணேஷ்குமாரின் உடலைப்பார்த்து அவரது பெற்றோர் கதறிதுடித்தது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துபாயில் சம்பளம் கிடைக்காததால் திருமணத்தை நிறுத்திய இந்திய என்ஜினீயரின் சோகம்!!
Next post மாவோயிஸ்டு கும்பலுடன் கண்ணன் கைது: காதல் மனைவி ரீனா ஜாஸ்மின் மதுரையில் பதுங்கலா?