கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!

Read Time:1 Minute, 48 Second

86dd385b-7502-4e21-b203-d9ce68c8fd86_S_secvpfமேற்கு வங்காள மாநிலத்தில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டம் கங்னாபூர் கிராமத்தில் கிறிஸ்தவ கான்வென்ட் பள்ளிக்கூடம் உள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த பள்ளிக்குள் புகுந்த 7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் அங்கிருந்த தலைமை கன்னியாஸ்திரியை கற்பழித்தது. பின்னர் அங்கிருந்த ரூ.12 லட்சம் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது.

மேற்கு வங்கம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சி.ஐ.டி. போலீசார், சம்பவத்தில் தொடர்படைய 3 பேரை ஏற்கனவே கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த கற்பழிப்பு மற்றும் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மிலன் சர்க்கார் மற்றும் அவனது கூட்டாளியான அகிதுல் இஸ்லாம் பாபு ஆகியோர் நேற்று இரவு கொல்கத்தா அருகே உள்ள சீல்டா ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு தான்..!!
Next post புதையலுக்காக பெண் உடலைகீறி சித்ரவதை: கணவர்–மகள் கொடூரம்!!