புதையலுக்காக பெண் உடலைகீறி சித்ரவதை: கணவர்–மகள் கொடூரம்!!

Read Time:2 Minute, 51 Second

90daf907-659f-4ea0-b468-71e943790dbd_S_secvpfஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் புட்டபர்த்தி அருகே உள்ள செர்ல பள்ளியை சேர்ந்தவர் சென்ட் ராயுடு. இவரது மனைவி ராமன்சன அம்மாள்.

சென்ட்ராயுடுவுக்கு ஒரு மந்திரவாதி அறிமுகம் ஆனார். சென்ட்ராயுடு வீட்டை பார்த்த அவர் “இங்கு புதையல் இருக்கிறது. பெண்ணை பலி கொடுத்தால் அது கிடைக்கும்” என்றார்.

புதையல் ஆசையில் மனைவி என்று பார்க்காமல் ராமன்சன அம்மாளை பலி கொடுக்க சென்ட்ராயுடு முடிவு செய்தார்.

கடந்த புதன்கிழமை இரவு நடுவீட்டில் அவரை அமரச்செய்தார். மகள் சாந்தகுமாரி, மருமகன் சென்ன கேசவலு ஆகியோர் அவளை சுற்றி அமர்ந்தனர். மருமகன் மேளம் அடிக்க திடீர் என மகள் சாந்தகுமாரி சாமி வந்தது போல் ஆடினாள்.

“அந்த பெண்ணை ஆடையின்றி அமரவை” என்று அவர் கூற சென்ட் ராயுடு மனைவியை நிர்வாணமாக்கி கோலத்தின் மீது உட்கார வைத்தார்.

அவளது வாயில் எலுமிச்சை பழத்தை திணித்தார். பின்னர் அதனை கத்தியால் குத்தி தொண்டைக் குழியில் இறக்கினார். வலியால் துடித்த ராமன்சன அம்மாளால் சத்தம் போட முடியவில்லை.

கத்தியால் குத்தியதில் அவளது வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. உதடு கிழிந்தது. அதோடு விடவில்லை. அவளது கை, கால்களை கத்தியால் கீறி அதில் இருந்து வந்த ரத்தத்தால் கோலமிட்டனர்.

நள்ளிரவிலும் தாரை தப்பட்டை முழங்க பூஜை நடந்ததால் அக்கம் பக்கத்தில் குடியிருந்தவர்களின் தூக்கம் கெட்டது. அவர்கள் என்ன நடக்கிறது என்று சென்ட்ராயுடு வீட்டில் எட்டி பார்த்தனர். அங்கு நடந்த சித்ரவதை காட்சியை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். புட்டபர்த்தி போலீசார் விரைந்து வந்து சித்ரவதைக்குள்ளான ராமன்சன் அம்மாளை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது தொடர்பாக அவரது மகள் சாந்தகுமாரி கைது செய்யப்பட்டார். சென்ட் ராயுடுவும், மருமகன் சென்னகேசவலு ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!
Next post மஸ்தான்வலி எனது கணவர்: செம்மரகட்டை கடத்தலில் நான் ஈடுபடவில்லை – நடிகை நீத்து அகர்வால் பேட்டி!!