களியக்காவிளை அருகே 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 54 Second

18343886-2505-4aa8-8978-8757e703c294_S_secvpfகளியக்காவிளையை அடுத்த பாறசாலை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஆலயத்திற்கு சென்றார்.

அப்போது உதியன்குளக்கரையை சேர்ந்த வாலிபர் ரமேஷ் (வயது 27) என்பவர் சிறுமியை சந்தித்து பேசினார். முதல் சந்திப்பிலேயே இருவரும் நெருக்கமாக பழகினர். இதில் சிறுமியின் செல்போன் எண்ணை, ரமேஷ் வாங்கி கொண்டார்.

2 நாட்களுக்கு முன்பு அவர், சிறுமியை தொடர்பு கொண்டு நெய்யாற்றின் கரைக்கு வரும்படி கூறினார். அங்கு வந்த சிறுமியை ரமேஷ், மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்றார். பின்னர் தனது உறவினர் வீட்டில் வைத்து அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதன் பிறகு அந்த சிறுமியை பஸ் நிலையத்தில் விட்டு விட்டு மாயமாகி விட்டார். இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்கள் பாறசாலை போலீசில் புகார் செய்தனர்.

சம்பவம் பற்றி டி.எஸ்.பி. சுரேஷ் குமார் வழக்கு பதிவு செய்து ரமேஷின் செல்போன் எண் மூலம் அவர், எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்தார். நெய்யாற்றின்கரை ரெயில் நிலையத்தில் அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஸ்தான்வலி எனது கணவர்: செம்மரகட்டை கடத்தலில் நான் ஈடுபடவில்லை – நடிகை நீத்து அகர்வால் பேட்டி!!
Next post நாங்குநேரி அருகே புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை?: போலீசார் விசாரணை!!