நாங்குநேரி அருகே புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை?: போலீசார் விசாரணை!!
நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் குடியிருப்பைச்சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவருக்கு திருமணமாகி 3 மாதங்கள் தான் ஆகிறது. மணிகண்டன் மனைவியுடன் சென்னையில் குடித்தனம் நடத்தி வந்தார்.
கடந்த 5–ந் தேதி இவர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். அதன் பின் அவரை காணவில்லை.
இந்தநிலையில் நேற்று அந்தப்பகுதியில் உள்ள கிணற்றில் மணிகண்டன் பிணமாக மிதந்த நிலையில் கிடந்தார். அவரது உடலில் அடித்து காயப்படுத்திய ரத்தக்காயங்கள் உள்ளன. இதனால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது தாய்மாமா நாராயணன் மூலக்கரைபட்டி போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
Average Rating