வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் கர்ப்பத்தை கலைத்த கணவன்!!

Read Time:2 Minute, 0 Second

32e45816-9c45-4c4e-beb2-c82c259af212_S_secvpfநத்தம் ஆவிச்சிபட்டியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கும் சத்யா (வயது24) என்பவருக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருணம் நடந்தது. திருமணத்தின்போது 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

திருமணமான சில நாளிலேயே பணம், நகை அனைத்தையும் கணவர் வாங்கி வைத்துக்கொண்டார். ஈரோட்டில் பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்த மணிவண்ணனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது.

இதனால் சத்யா மணிவண்ணணின் சித்தப்பா செல்லையா என்பவரது வீட்டில் இருந்து வந்தார். செல்லையா பொதுப் பணித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி சத்யாவிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து கணவரிடம் கூறினாலும் அவர் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.

மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு அடிக்கடி சத்யாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். வரதட்சணை வாங்கி வராததால் அவரது கர்ப்பத்தையும் கலைத்துள்ளனர். இது குறித்து சத்யா வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதட்சணைக்காக மனைவியின் கர்ப்பத்தை கலைத்த கணவர் மணிவண்ணன், அவரது சித்தப்பா செல்லையா, சகோதரர் கண்ணன், அவரது மனைவி தனம் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிளஸ்–2 தேர்வில் மதிப்பெண் குறைவு: குமரியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி!!
Next post பிளஸ்–2 தேர்வில் தோல்வி எதிரொலி: குடியாத்தம் அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேர் தற்கொலை!!