முகவரி கேட்பது போல் பெண்ணிடம் நகை பறிப்பு: 2 பேரை மின்கம்பத்தில் கட்டிவைத்து பொது மக்கள் தர்மஅடி!!

Read Time:3 Minute, 34 Second

a92a5b5c-4348-4f0f-8c4c-bc04ac13cc2b_S_secvpfகோவை அருகே உள்ள தடாகம் திவ்யா காலனியை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 34). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (29). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் வேலைக்கு சென்றதும் நேற்று காலை 8 மணி அளவில் ஈஸ்வரி தனது குழந்தை அபிநயாவுக்கு வீட்டின் வெளியே வைத்து சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் இருவரும், மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஈஸ்வரியிடம் ஒரு கார்டை காண்பித்து, அதில் இருந்து முகவரி கேட்பது போன்று நடித்தனர்.

அப்போது அந்த முகவரி குறித்து தனக்கு தெரியாது என்று ஈஸ்வரி அவர்களிடம் கூறினார். அப்போது நைசாக ஒருவர் அங்கிருந்து சென்று மோட்டார் சைக்கிளில் ஏறி நகையை பறித்து விட்டு தப்பி செல்வதற்கு வசதியாக அதை ‘ஸ்டார்ட்’ செய்தவாறு நின்றார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மற்றொருவர் திடீரென்று ஈஸ்வரியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி ஓட முயன்றார். ஆனால் ஈஸ்வரி அந்த நபரின் சட்டையை பிடித்து, ‘திருடன், திருடன்’ என்று கத்தினார். இதை சற்றும் எதிர்பாராத அந்த நபர் திகைத்து நின்றார். இதற்குள்ளாக ஈஸ்வரியின் சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் அங்கு ஓடிவந்தனர்.

பொது மக்கள் திரண்டு வந்ததை பார்த்த 2 ஆசாமிகளும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். ஆனால் பொதுமக்கள் அவர்களை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். பிடிபட்ட 2 ஆசாமிகளையும் பொது மக்கள் அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு பொதுமக்கள் கட்டி வைத்திருந்த 2 பேரையும் போலீசார் மீட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் பொது மக்களிடம் தெரிவித்தனர். பின்னர் 2 பேரையும் கைது செய்து துடியலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த கார்த்தி (24), தூத்துக்குடி மாவட்டம் புலியகுளத்தை சேர்ந்த கணேசமூர்த்தி (29) என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிளஸ்–2 தேர்வில் தோல்வி எதிரொலி: குடியாத்தம் அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேர் தற்கொலை!!
Next post முன்னாள் மனைவி மீது ஆசிட் வீசியவருக்கு 117 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கிய பாகிஸ்தான் நீதிமன்றம்!!