பெங்களூருவில் நாயை கொன்று சமைத்து சாப்பிட முயற்சி: மணிப்பூரை சேர்ந்த 3 பேர் கைது!!

Read Time:1 Minute, 48 Second

0f2b4852-af8f-4b20-ba8c-9e90144b87b3_S_secvpfபெங்களூரு கே.ஆர்.புரம் சுபாஷ்நகர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ரோவின், டோல்கித், மைக்கெல் ஆகிய 3 பேரும் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது.

இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜூகவுடா மற்றும் அக்கம்பக்கத்தினர், அவர்களது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு நாய் தோல் உரிந்த நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அவர்களிடம் கேட்டனர். அப்போது அவர்கள் மலுப்பலாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதி மக்கள், ‘புளுகிராஸ்’ அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த புளுகிராஸ் அமைப்பினர், 3 பேரிடமும் விசாரித்தனர். அப்போது அவர்கள், நாயை கொன்று சமைத்து சாப்பிட முயன்றதை ஒப்புக் கொண்டனர். இதுகுறித்து புளுகிராஸ் அமைப்பினர் 3 பேரையும் புளுகிராஸ் அமைப்பினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளாவில் வீராங்கனை தற்கொலை: 8 சீனியர் வீராங்கனைகளிடம் போலீசார் விசாரணை!!
Next post வாட்ஸ் அப் வீடியோ காட்சி பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!!