குலசேகரம் அருகே சி.ஆர்.பி.எப். வீரர் திடீர் மாயம்!!

Read Time:2 Minute, 4 Second

e8068f4e-f3e4-45d9-bb8f-c44a4c43f8d5_S_secvpfகுலசேகரத்தை அடுத்த அரமன்னம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 34).

இவர் டெல்லியில் சி.ஆர்.பி.எப். வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுஜிதா (25). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் சிவகுமார் கடந்த மார்ச் மாத இறுதியில் டெல்லியில் இருந்து ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்தார். விடுமுறை முடிந்து கடந்த மாதம் 17–ந் தேதி அவர் மனைவி மற்றும் உறவினர்களிடம் கூறிவிட்டு பணியில் சேர டெல்லி புறப்பட்டார்.

ஆனால் அவர் கடந்த வாரம் வரை டெல்லி சென்று பணியில் சேரவில்லை. இதனால் அங்கிருந்து அதிகாரிகள் அரமன்னத்தில் உள்ள மனைவி சுஜிதாவை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது சிவகுமார் பணியில் சேர டெல்லி புறப்பட்டு சென்ற தகவலை அவரது மனைவி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இங்கிருந்து புறப்பட்ட சிவகுமார் எங்கு சென்றார் என்பதை அறிய அவரது மனைவி, சிவகுமாரின் செல்போனை தொடர்பு கொண்டார். அப்போது அதுவும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் பதறிபோன சுஜிதா இது பற்றி குலசேகரம் போலீசில் புகார் செய்தார். அதில் டெல்லிக்கு பணிக்கு சென்ற தனது கணவரை காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தரும்படியும் கூறியிருந்தார்.

இது பற்றி இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்கு பதிவு செய்து மாயமான சி.ஆர்.பி.எப். வீரர் சிவகுமாரை தேடி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைதான கணவரை விடுவிக்கக்கோரி கையை பிளேடால் அறுத்த இளம்பெண்: போலீஸ் நிலையத்தில் பரபரப்பு!!
Next post வீட்டில் அடைத்து வைத்து வெளிமாநில பெண்ணை சித்ரவதை: தொழில் அதிபர் கைது!!