மோனலிசா ஓவியத்தில் வேற்றுக்கிரகவாசி! ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் (வீடியோ இணைப்பு)!!

Read Time:3 Minute, 1 Second

mona_lisa_001மோனலிசா ஓவியத்தில் வேற்றுக்கிரகவாசி இருப்பதற்கான தகவலை லியோனார்டோ டாவின்சி மறைத்துள்ளார் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த ஓவியத்தில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான சான்று உள்ளதாகவும் அவர்கள் தெளிவாக கூறியுள்ளனர்.

லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தில் மறைந்திருக்கும் ரகசியம் குறித்து பல்வேறு கருத்துகள் நீண்ட நாட்களாக பரவியுள்ளன.

இந்நிலையில், ஓவியத்தில் ஏலியன் துறவி ஒருவர் மறைந்து உள்ளார் என வேற்று கிரகவாசிகள் குறித்த ஆய்வு நடத்தும் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், வேற்று கிரகவாசிகளின் மறைவு வாழக்கை முறை, அவர்களின் முக அமைப்புகள், தலையில் அணியும் தொப்பி, மேல் அங்கி மற்றும் கைகள் ஆகியவை குறித்தும் வெளியிட்டுள்ளனர்.

எனினும், அந்த வீடியோ, வேற்று கிரகசவாசிகள் இருப்பதற்கான சாத்தியங்களை குறித்த நம்ப கூடிய விளக்கங்கள் எதனையும் வழங்கவில்லை.

வேற்றுகிரக தட்டுகளை குறித்த இணையதளம் ஒன்றினை நடத்தி வரும் வேற்றுகிரகவாசி கருத்தியலாளர் ஸ்காட் சி வேரிங் கூறுகையில், லியோனார்டோ டா வின்சி ஒரு வேற்று கிரகவாசியாக இருப்பதற்கோ அல்லது அதில் பாதியாக இருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகமாக காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அவர் தனது படைப்புகளில், ரகசிய தகவல்கள் மற்றும் குறியீடுகளை மறைத்து வைப்பவர் என்பது தெரிந்ததே.

அதனால், இந்த புதிய கண்டுபிடிப்பு, அவரது அசாதாரண திறமைகள் எங்கிருந்து வந்தது. அவை வேற்று கிரகவாசிகளிடம் இருப்பது. இது தெரியாத விடயத்தை அறிவதற்கான முக்கிய கரு பொருளாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டில், மோன லிசாவின் ஓவியத்தில் அவரது கண்களில் சிறிய எண்கள் மற்றும் எழுத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது என்றும், அது குறியீடுகளாகவும் இருக்க கூடும் எனவும் வரலாற்று கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!
Next post திருச்சி உறையூரில் ஒரே நாளில் 2 பெண்களிடம் 14 பவுன் செயின் பறிப்பு!!