மருத்துவம் படித்து வந்த உ.பி. மந்திரியின் மகள் கங்கையில் மூழ்கி பலி?
Read Time:53 Second
உத்தர பிரதேசம் மாநில கேபினட் மந்திரியாக இருப்பவர் ஷாகித் மன்சூர். இவருடைய மகள் அபிதா ஹசன் (வயது 24). டாக்டர் படித்து வரும் இவர் உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் சென்றிருந்தார்.
அங்குள்ள போல்சாட்டி ஆஸ்ரமம் அருகே தனது தோழிகளுடன் கங்கை ஆற்றில் படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தவறி ஆற்றில் விழுந்தார். தண்ணீர் அவரை இழுத்துச் சென்றது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் அவரை தேடி வருகிறார்கள். இதற்கிடையே தகவல் அறிந்து ஷாகித் மன்சூர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
Average Rating