குடிபோதையில் 10 மாத குழந்தையை கொல்ல முயன்ற தந்தை!!

Read Time:2 Minute, 30 Second

65014204-e208-4462-ad32-0d847d8894aa_S_secvpfதிண்டுக்கல் முத்தழகுபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் செபஸ்தியான் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சாந்தி என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெட்லி (வயது 7) மற்றும் ரெனால்டு என்ற 10 மாத கைக்குழந்தையும் உள்ளது.

செபஸ்தியான் குடிபழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடித்து வந்து தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கடந்த திங்கட்கிழமை சாந்தி வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று மயங்கி விழுந்தார்.

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று குடிபோதையுடன் வீட்டிற்கு வந்த செபஸ்தியான் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 10 மாத கைக்குழந்தையை அடித்து தாக்கினார். மேலும் அவன் வாயில் தூக்க மாத்திரையை போட்டு தண்ணீர் ஊற்றினார்.

இதில் அந்த குழந்தை பயங்கர சத்தத்துடன் அழ தொடங்கியது. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செபஸ்தியானிடம் இருந்து குழந்தையை மீட்டனர். குழந்தைக்கு முகம், வாய் மற்றும் உடல் பகுதியில் பயங்கர காயம் ஏற்பட்டிருந்தது.

தண்ணீரை வாயில் ஊற்றியதால் மூச்சு திணறலும் ஏற்பட்டது. இதனையடுத்து குழந்தையை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நகர் தெற்கு போலீசில் புகார் செய்ததின் பேரில் போலீசார் செபஸ்தியானை தேடி வருகின்றனர்.

குடிபோதையில் பெற்ற மகனையே கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லூரி மாணவர் கொலை: 7 பேருக்கு ஆயுள் தண்டனை-சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது!!
Next post சீர்காழியில் டாக்டர் இறந்ததாக கூறிய விவசாயி உயிருடன் இருந்ததால் பரபரப்பு!!