கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த முதியவரை அடித்துக் கொன்ற தொழிலாளி!!
ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டதில் கடனுக்கு சிகரெட் கொடுக்காத வயதான முதியவரை விவசாய வேலைப்பார்க்கும் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாவட்டத்தில் உள்ள வீருலபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்ம ராவ். இவர் சிறிய பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு சுதாகர் என்ற தொழிலாளி வந்து ஒரு சிகரெட் கேட்டுள்ளார். சிகரெட் வேண்டுமானால் பணம் கொடு என்று நரசிம்ம ராவ் கேட்டுள்ளார். ஆனால் பணம் இல்லை என்று சுதாகர் கூறியுள்ளார்.
இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி சுதாகர் அந்த முதியவரை அடித்து உதைத்துள்ளார். இதில் முதியவர் இறக்கவே சுதாகர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிகரெட் கடன் கொடுக்காததால் கடைக்காரரை அடித்து கொன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating