திகார் ஜெயிலில் கைதி கத்தியால் குத்திக் கொலை!!
Read Time:58 Second
டெல்லியில் கடும் நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்ற திகார் சிறையில் தண்டனைக் கைதி ஒருவர் இன்று சக கைதிகளால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, அஜய் என்ற பெயர் கொண்ட அந்தக் கைதியை சக கைதிகளான சுமித், ராகேஷ், ராமன் என்ற மூன்று பேர் சேர்ந்து குத்திக் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கொலைக்கான காரணம் குறித்த விவரங்கள் எதுவும் வெளிவராத நிலையில், குற்றவியல் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் திகார் சிறைக்கு டெல்லி போலீசார் விரைந்துள்ளனர்.
Average Rating