பண்ருட்டியில் தொழிலாளியை கத்தியால் குத்தி முகமூடி கொள்ளை!!

Read Time:1 Minute, 32 Second

8c41bb53-dcee-4b9b-81cc-9955a745cb10_S_secvpfபண்ருட்டியை அடுத்த எல்.என்.புரத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 35), தச்சுத்தொழிலாளி.

நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் இவர் தனது அண்ணனை பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து அழைத்து வர மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பண்ருட்டி வ.உ.சி. நகர் பகுதியில் சென்றபோது பின்னால் முகமூடி அணிந்த 2 மர்ம மனிதர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர்.

அந்த 2 பேரும் புருஷோத்தமனின் இருசக்கர வாகனத்தை முந்தி சென்று திடீரென வழிமறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் மிளகாய் பொடியை புருஷோத்தன் முகத்தில் வீசினர். பிறகு புருஷோத்தமனை கத்தியால் குத்தி அவர் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதில் படுகாயமடைந்த புருஷோத்தமன் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. முகமூடி கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணை செங்கல்லால் தாக்கிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!!
Next post மரண தண்டனை சாதித்தது….? -நோர்வே நக்கீரா (சிறப்புக் கட்டுரை)!!