சிதம்பரத்தில் கழுத்து அறுபட்டு கிடந்த மருத்துவ மாணவிக்கு தீவிர சிகிச்சை!!

Read Time:1 Minute, 23 Second

e150653c-c296-4241-b151-8cd51aa253a3_S_secvpfசேலத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகள் ரேவதி (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி எம்.பி.பி.எஸ். 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாலை விடுதியில் இருந்து வெளியே சென்ற ரேவதி அதன்பிறகு விடுதிக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் ரேவதி கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவர் உடனடியாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவி ரேவதியை யாராவது கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்தார்களா? அல்லது ரேவதி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்கும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை இரும்பு கம்பியால் தாக்கி கொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது!!
Next post கோவையில் கைதான மாவோயிஸ்டு தம்பதியின் மகள் ஆமிக்கு பேஸ்–புக்கில் பெருகும் ஆதரவு!!