தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு: அம்மிக்கல்லை தலையில் போட்டு விவசாயி படுகொலை!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூசலூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35), விவசாயி. இவரது தம்பி கட்டபொம்மன் (33). இவர்கள் இருவரும் திருமணமாகி அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கட்டபொம்மன் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரது அண்ணன் பெருமாள், கட்டபொம்மனை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து உதவி செய்தார். அப்போது கட்டபொம்மனின் மனைவி சுப்புலட்சுமிக்கும், பெருமாளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதையறிந்த கட்டபொம்மன் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்புலட்சுமி, தனது கணவருடன் கோபித்து கொண்டு பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையே பெருமாளின் மனைவியும், அவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கட்டபொம்மன் அங்கு சென்றார். அப்போது தனது அண்ணன் பெருமாள், மனைவி சுப்புலட்சுமி ஆகிய 2 பேரும் தனியாக பேசிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே ஆத்திரமடைந்த கட்டபொம்மன் பெருமாளிடம் சென்று தகராறு செய்தார். இந்நிலையில் நேற்றிரவு பெருமாள், அவரது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு சென்ற கட்டபொம்மன் அருகே கிடந்த அம்மிக்கல்லை தூக்கி பெருமாள் தலையில் போட்டு விட்டு தப்பியோடிவிட்டார். இதில் தலை நசுங்கிய பெருமாள் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே கட்டபொம்மன் குளத்தூர் போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் அண்ணனை தம்பியே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating