கும்பகோணம் அருகே தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை!!
Read Time:1 Minute, 14 Second
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (60). விவசாய கூலித்தொழிலாளி.
இவர் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் சுந்தரம் கழுத்தை சரமாரி அறுத்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருப்பனந்தாள் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட சுந்தரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுந்தரத்திற்கும் அவரது மகனுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த பிரச்சனையில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating