திருமணமான 2 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை!!
Read Time:1 Minute, 13 Second
பொன்னேரியை அடுத்த உக்கரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் தொழிலாளி. இவருக்கும் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொற்செல்விக்கும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
கடந்த சில நாட்களாக கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பொற்செல்வியின் தந்தை கோதண்டம் போலீசில் அளித்துள்ள புகாரில், மகளை வரதட்சணை கொடுமை செய்து உள்ளனர். அவளது சாவில் மர்மம் உள்ளது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளார்.
பொன்னேரி போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள். பொற்செல்விக்கு திருமணமாகி 2 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
Average Rating