திருவள்ளூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை!!

Read Time:1 Minute, 21 Second

024b7308-40a5-4a45-be34-73529a82b960_S_secvpfஅரக்கோணத்தை அடுத்த கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30) இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.

கடந்த வாரம் கணவருடன் குடும்பத்தகராறில் கல்பனா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் கண்ணன் சோகம் அடைந்தார். அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த ஏறையமங்களத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். அங்கு அவரிடம் மனைவி தற்கொலை செய்தது குறித்து கேட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த கண்ணன் அருகில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கண்ணனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி இறந்த ஒரு வாரத்தில் கணவரும் தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருநாவலூர் அருகே முந்திரி தோப்பில் கல்லூரி மாணவி பிணம்: போலீசில் தாய் புகார்!!
Next post கேமரூன் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி. பிரீத்தி மந்திரி ஆகிறார்!!