நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்: பலி 36 ஆக உயர்வு!!
நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் இன்று மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாலை 4 மணி நிலவரப்படி நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 19 ஆக இருந்தது. மாலை 6 மணி நிலவரப்படி பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்திருப்பதாகவும், 1117 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் நேபாள உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு இந்திய விமானப்படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்தியாவில் வடமாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. பீகாரில் 16 பேர், உ.பி.யில் ஒருவர் என மொத்தம் 17 பேர் பலியாகி உள்ளளதாகவும், 39 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Average Rating