நீயும் நானும் நிலவும் வானும் (திரைவிமர்சனம்)!!

Read Time:3 Minute, 48 Second

Neeyum2நாயகன் தனிஷ், நாயகி மடால்சாவை பார்த்தவுடன் காதலிக்கிறார். உடனே தன் காதலை மடால்சாவிடம் சொல்கிறார். ஆனால் மடால்சா, தனிஷின் காதலை ஏற்க மறுக்கிறார். இருந்தாலும் மடால்சாவை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் தனிஷ். ஒரு கட்டத்தில் தனிஷின் காதலை மடால்சா ஏற்றுக் கொள்கிறார்.

இருவரும் காதலித்து வருகின்றனர். ஒரு சமயத்தில் தனிஷின் பர்சில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்க்கிறார் மடால்சா. பின்னர் தனிஷ் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்திருப்பதை தெரிந்துக் கொள்கிறார். தன் காதலன் தனிஷ் தன்னிடம் இந்த விஷயத்தை மறைத்ததால் அவன் மீது கோபப்பட்டு காதலை வெறுக்கிறார்.

இறுதியில் மடால்சாவை தனிஷ் சமாதானம் செய்தாரா? தனிஷின் முன்னாள் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தனிஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல், சென்டிமென்ட், நடனம், ஆக்‌ஷன் என அனைத்திலும் தன் திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பிளாஷ்பேக்கில் வரும் நித்தியிடம் காதல் செய்யும் காட்சிகளும், அவருடைய காதலுக்காக ஏங்கும் காட்சிகளையும் சிறப்பாக செய்திருக்கிறார்.

படத்தில் நாயகி மடால்சா சிறிதளவே வருகிறார். அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பிளாஷ்பேக்கில் வரும் நாயகி நித்திக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நித்தியும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் முக்கியமா, குடும்பம் முக்கியமா என்று நடிப்பில் வேறுபாடு காண்பித்திருக்கிறார். தனிஷ்-நித்தி நடனக்காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

காதல் கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் திரிநாத ராவ் அதில் சுவாரஸ்யம் சேர்க்காமல் விட்டிருக்கிறார். பிளாஷ்பேக்கிலேயே அதிக காட்சிகளை நகர்த்திருக்கிறார். எல்லாருக்கும் முதல் காதல் என்று ஒன்று இருக்கும் என்றும், காதலில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் தான் என்ற கருத்தை ஆணித்தனமாக சொல்லியிருக்கிறார். காதல் காட்சிகள் ஏற்கனவே பழைய தமிழ் படங்களை ஞாபகப்படுத்தியிருக்கிறது. கொஞ்சம் சுவாரஸ்யம், கொஞ்சம் விறுவிறுப்போடு காட்சிகளை அமைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

சேகர் சந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக செய்திருக்கிறார். சாய் ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ‘நீயும் நானும் நிலவும் வானும்’ காதல் கவிதை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாள நிவாரணத்துக்காக ஹன்சிகா விஜய் நிதியுதவி!!
Next post ரத்த புற்றுநோய் தாக்கிய சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.!!